5 இந்திய மீனவர்கள் கைது

226 0

அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்த மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட கடலின் மன்னார் பகுதியில் வைத்து இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் கச்சதீவு பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மேலதிக விசாரணைகளின் பொருட்டு மன்னர் மீன்பிடி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.