முல்லைத்தீவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தொழிலாளர் தினத்தை துக்க தினமாக அனுஸ்டிப்பு(காணொளி)

274 0

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 55 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசாங்கமானது எந்தவித தீர்வுகளையும் முன்வைக்காத நிலையில் இன்றும் போராட்டம் முன்னேடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்றைய தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்க தினமாக அனுஸ்ரித்து வருகின்றனர்.

தொழிலாளர்களின் உரிமைகளை கோரி இடம்பெறுகின்ற இந்த தினத்தில் தொழில் புரியும்   தமது உழைக்கும் வர்க்கமான கணவன் உறவுகளையே தொலைத்துள்ள நாம் என்ன உரிமைகளை கோருவது என கேள்வி எழுப்பியவாறு, தொழிலாளர் தினத்தை துக்க தினமாக அனுஸ்டித்து வருகின்றனர்.