இலங்கையில் திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவ இந்தியாவும் ஜப்பானும் முயற்சி

246 0

இந்தியாவும் ஜப்பானும் இலங்கையில் திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உடன்படிக்கை இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கெரவலப்பிட்டிய பகுதியில் இந்த நிலையம் அமைக்கப்படவுள்ளது.

குறித்த மின்னுற்த்தி நிலையத்தில் இருந்து 500 மெகாவோட் மின்சாரத்தை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.