இலங்கை மீனவர்கள் மீது தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு

305 0

இலங்கை மீனவர்கள் தங்களது கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசிப்பதாக தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழகம் – கன்னியாகுமரி மீனவர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

தற்போது அங்கு மீன்பிடித் தடைக்காலம் அமுலில் இருக்கிறது.

இதனால் கன்னியாக்குமரி மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்வதில்லை.

ஆனால் இலங்கையில் இருந்து விசைப்படகுகளின் ஊடாக பலர் கன்னியாகுமரி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.