முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்கள் ஒப்பாரிப் போராட்டம்.

388 0

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இன்றைய மே தினத்தை துக்க நாளாக அனுஸ்டித்துள்னர்.

குறித்த மக்கள் இன்று நண்பகல் ஒப்பாரிப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

“நாங்கள் எட்டுவருடங்களாக எமது சொந்த நிலங்களில் தொழில் செய்ய முடியாது இருக்கின்றோம். இவ்வாறான சூழலை மாற்றி எமது சொந்த நிலங்களில் மீள்குடியேற வேண்டும்,

பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம், தற்பொழுதும் தொடர்கின்றோம் ஆனால் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை” என்று போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர்.

கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு இன்று 62ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.