ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக அர்ஜூன மகேந்திரன்

398 0

Arjuna-Mahendran-e1460497280990மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அர்ஜூன மகேந்திரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மற்றும் முதலீடுகள் தொடர்பான ஆலோசகராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜூன மகேந்திரனை மீண்டும் மத்தியவங்கியின் ஆளுநராக நியமிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல முயற்சிகள் எடுத்தபோதும், பிணைமுறி கொடுப்பனவு தொடர்பான விசாரணை நடைபெற்றுவருவதால் அதற்கு கோப் குழு எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.

இதனையடுத்து மத்திய வங்கி ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி தெரிவுசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.