காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்திய கிளிநொச்சி மே தினம்

294 0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்தும் வகையில் தமிழ் தேசிய மே தினம் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிக் கிளையின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றில் ஆரம்பிக்கப்பட்டது.

மே தின ஊர்வலம் டிப்போச் சந்தியை சென்றடைந்தது. அங்கு பொதுக் கூட்டம் இடம்பெற்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிக் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊர்வலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசில் கைதிகளை சித்தரிக்கும் வகையில் ஊர்திகளும் பயணித்தன.

இந்த மே தின நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ் கந்தராஜா, வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை உள்ளிட்டவர்களும் காணாமல் ஆக்கப்ட்டவர்களின் உறவினர்கள் மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.