யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பதவியேற்றார் விக்னேஸ்வரன்!

286 0

யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் இன்று காலை 10.20 மணியளவில் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரட்ணத்திடமிருந்து இன்று பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றிருந்தது.இதில் பேராசிரியர் வேல்நம்பி, பேராசிரியர் சற்குணராசா மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதனடிப்படையில் இறுதி தீர்மானத்தை ஜனாதிபதியே எடுக்கவேண்டும் என்ற நிலையில், பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் யாழ்.பல்கலைக்கழகத்தின் 8ஆவது துணைவேந்தராக தெரிவுசெய்யப்பட்டார்.

தொடர்ந்து இன்றைய தினம் பேராசிரியை வசந்தி அரசரட்ணத்திடமிருந்து துணைவேந்தருக்கான பொறுப்புக்களை பெற்றுகொண்டுள்ளார் விக்னேஸ்வரன்.இதேவேளை தேர்தல் மூலம் பேராசிரியர் சற்குணராஜா முதலாவதாக தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பின் இருந்த விக்னேஸ்வரனே துணைவேந்தராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.