கடன்களை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசாங்கம் நிவாரணத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிவாரணம், இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கிகள் சங்கம், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் துறையின் பிரதிநிதிகள் மற்றும் பிற தொடர்புடைய அரசு நிறுவனங்களுடன் இணைந்து, வங்கித் துறையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்து பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர முயற்சிகளின் வணிக நடவடிக்கைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது