95 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடிய நபரொருவர் கைது

236 0

பொரளை பிரதேசத்தில் நிதி நிறுவனமொன்றில் ரூபாய் 95 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடிய நபரொருவர் மொரவக பிரதேசத்தில் மறைந்திருந்த போது காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அந்த நிதி நிறுவனத்திலேயே பணிபுரிந்துள்ள நிலையில், இவர் பல தடைவைகள் நிறுவனத்தின் தங்க நகைகளை திருடியுள்ளமை தெரியவந்துள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

அந்த நிதி நிறுவனத்தின் முகாமையாளர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய நீதிமன்ற உத்தரவை பெற்று குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.