இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி

253 0

மீகஹவத்தை – நாரங்வல பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போது, இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் தெல்கொட பகுதியைச் சேர்ந்த 41 வயதான குறித்த நபர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை மீகஹவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.