அதி நவீன நோயாளர் காவு வண்டியை இலங்கைக்கு வழங்கியது ஜப்பான்

249 0

சகல மருத்துவ கருவிகள் அடங்கலான வசதிகளைக் கொண்ட, நோயாளர் காவு வண்டி ஒன்றை, இலங்கை வான் படைக்கு ஜப்பான் நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதனை ஜப்பானிய அதிகாரிகள் இலங்கை வான் படை தளபதி எயார் மார்சல் கபில ஜயம்பதியிடம் கையளித்துள்ளனர்.

இந்த நிகழ்வு வான்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த நோயாளர் காவு வண்டி, அனர்த்த காலப்பகுதியினில் அவசர உதவியினை மக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் அமையும் என நிகழ்வில் உரையாற்றிய வான் படை தளபதி குறிப்பிட்டார்.