ஹொரணை, வகவத்த பாலத்தின் அருகாமையில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாணந்துறை தொடக்கம் இரத்தினபுரி நோக்கி பயணித்த கார் ஒன்று மோட்டார் சைக்களில் ஒன்றுடன் மோதுண்டதினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 19 வயது மற்றும் 20 வயதுடைய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காரின்; சாரதி ஹொரணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.