கல்லடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பத்து பேர் காத்தான்குடி பொலிசாரால் கைது

371 0

201607241508581130_4-women-militants-arrested-in-Bangladesh_SECVPFமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் பணத்திற்காய் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை நேற்றிரவு (27.07.2016) காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.ஜெயசீலன் தெரிவித்ததர்.

கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் குறித்த நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இடத்திலிருந்து 9600ரூபாய் பணம் பாய்கள் மற்றும் சீட்டாட்ட சாதனங்கள் என்பன பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.