பாத யாத்திரை மாவனெல்லை – கனேதென்ன பிரதேசத்தில் முதல் நாளை நிறைவு செய்துகொண்டுள்ளது

396 0

b11அரசாங்கத்துக்கு எதிராக, நடத்தப்படும் குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த தரப்பினரின் பாதயாத்திரை இன்று மாவனெல்லை பிரதேசத்தில் முதலாம் நாளை நிறைவு செய்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியன்று கொழும்பை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள அந்த பேரணி, இன்று பேராதெனிய பாலத்தில் இருந்து ஆரம்பமானது.

கண்டியில் இருந்து ஆரம்பிக்கவிருந்த இந்தபேரணி, நேற்று பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை அடுத்து பேராதெனியவுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் கொழும்பு- கண்டி வீதியில் நெரிசல் நிலை ஏற்பட்டது.

இதன்போது நோயாளர் காவு வாகனம் ஒன்று வந்தபோதே தீவிரநிலை ஒன்று ஏற்பட்டது.

இதேவேளை இந்தப்பேரணியில் மஹிந்த ராஜபக்ச, கண்ணொருவையில் வைத்து இணைந்துக்கொண்டிருந்தார்.