பொன்சேகாவுக்கு பதவி என்பது ஜனாதிபதி வேடிக்கையாக கூறியது: அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க!!

208 0

வேடிக்கையான ஒரு கேள்வியை அடிப்படையாக கொண்டே அமைச்சரவைக் கூட்டத்தின் போது பாதுகாப்பு தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உயர் பதவி ஒன்றை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குவது பற்றி ஜனாதிபதி கூறியதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை கண்டி கெட்டம்பே மைதானத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக்கூட்டத்தில் கட்சியின் இளைஞர் அமைப்பின் சார்பில் 50,000 இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

மே தினக்கூட்டத்திற்காக 2,000 அரச பேருந்துகள் மற்றும் 1,000 தனியார் பேருந்துகள் பணம் செலுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளன.வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் பெருந்தொகையான மக்கள் கெட்டம்பே மைதானத்திற்கு வரவுள்ளனர்.மேலும், மே தினக்கூட்டம் முடிந்தும் அமைச்சர்கள் உட்பட சகலரும் இணைந்து மைதானத்தை சுத்தப்படுத்த உள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார்.