பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் போராட்டம்

304 0

20160218_121129பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று இரண்டாம் தினமாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம்முன்னெடுக்கப்படுகிறது.

இதனால் நாடு முழுவதும் உள்ள 15 பல்கலைக்கழகங்கள் மற்றும் அது சார்ந்த நிறுவனங்களின் செயற்பாடுகள் ஸ்த்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில், இந்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.