முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் ஆதரவு

266 0

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கமை நாளைய தினம் பூரண கதவடைப்பு போராட்டமொன்றில் ஈடுபட அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் நேற்றுடன் 49ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் நேற்று 56 ஆவது நாளாக இடம்பெற்றது.

இந்நிலையில் நாளையதினம் வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் போராட்டத்துக்கு இணைவாக முல்லைத்தீவிலும் மாபெரும் போராட்டமொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது