சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களில் மாற்றம்

312 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக பதவி வகித்த ஜனக பண்டார தென்னகோன், லொஹான் ரத்வத்த மற்றும் அனுர விதானகே ஆகியோருக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன் அமைப்பாளராக பதவி வகித்த தம்புள்ளை தொகுதியின் இணை அமைப்பாளர்களாக டப்ளிவ்.எம் யசமான மற்றும் யூ.ஆர் தயா நந்தசிறி நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த அமைப்பாளராக பதவி வகித்த பஹத்ததும்பர தொகுதியின் புதிய அமைப்பாளராக பஹத்ததும்பர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சமரஜீவ பண்டார வெலகெதர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊவா மாகாண சபை உறுப்பினர் அனுர விதானகமகே அமைப்பாளராக பதவி வகித்த மஹியங்கனை தொகுதியின் புதிய அமைப்பாளராக கே.பீ. குணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஐந்து மாவட்டங்களுக்காக 13 புதிய அமைப்பாளர்களுக்கு இன்று ஜனாதிபதியினால் நியமன கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்ட அமைப்பாளர்களாக மத்திய மாகாண சபை உறுப்பினர்களான நிஸ்ஸங்க ஹேரத், லின்டன் விஜேசிங்க, கண்டி முன்னாள் நகர முதல்வர் அசங்க தொடம்வல, குண்டசாலை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அசேல ஏக்கநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தம்புள்ள மாநகர சபையின் முன்னாள் பிரதி நகர முதல்வர் குசும்சிறி ஆரியரத்ன, நாவுல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுசில் பிரேமரத்ன ஆகியோர் மாத்தளை மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர்களாக சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் ச்சலித்த கருணாரத்ன, சாந்த ரத்நாயக்க மற்றும் நிக்ஷன் சூரியகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.அகிலதாஸ், பீ.கோபால கிருஷ்ணன், கந்தசாமி கருணாகரன் ஆகியோர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளராக என்.அருணதிலகன் நியமிக்கப்பட்டுள்ளார்.