சட்டவிரோத மணல் அகழ்வு – இலுப்படிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டம்

300 0

சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மர அழிப்பை தடுத்த நிறுத்த கோரி மட்டக்களப்பு இலுப்படிச்சேனை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு பதுளை வீதியை அண்மித்த ஆற்றுப்பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வும் காட்டு பகுதிகளில் மர அழிப்பும் இடம்பெறுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செயற்பாடுகளால் தங்களது வாழ்வாதாரத்திற்கும் சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்களை நடத்த போவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பான கோரிக்கைகயை அடங்கிய மனுவொன்றை அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனிடம் கையளித்துள்ளனர்.