மீதொட்டமுல்ல அனர்த்தம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு தொகை

313 0

மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மூன்று மாதங்களுக்காக வழங்கப்படவிருந்த 50 ஆயிரும் ரூபாய் நட்டஈட்டுத் தொகையை ஒரே தடவையில் வழங்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் இன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற குப்பைமேட்டு சரிவினால் 98 வீடுகளை சேதமடைந்தன.

இந்த வீடுகளில் வசித்துவந்த குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில், மூன்று மாதங்களுக்கான முழுத் தொகையும் ஒரே தடவையில் வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.