தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய ஐவர் கைது

6 0

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவருக்குச் சார்பாக, தேர்தல் சட்டத்தை மீறி பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் பொரளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை  பிரதேசத்தில் வசிக்கும் ஐந்து நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 1,500 சுவரொட்டிகள், பசை, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் ஐவரும் கூலிக்காக இவ்வாறு சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் இன்று திங்கட்கிழமை (21) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.