யாழில் கசிப்புடன் ஒருவர் கைது

12 0

யாழ்ப்பாணத்தில் 10 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊரெழு அம்மன் கோவிலுக்கு அருகில் வீடொன்றில் கசிப்பு விற்பனையில் நபரொருவர் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 10 லீட்டர் கசிப்பை மீட்டதுடன் , அதனை விற்பனைக்கு வைத்திருந்த நபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.