கனடாவில் பெண்களுடன் தகாத முறையில் ஈடுபட்ட தமிழர் கைது

41 0

கனடாவில் பெண்களுடன் தகாத முறையில் ஈடுபட்ட தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மார்க்கம் பகுதியில் வசிக்கும் 62 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே, பெண்ணொருவருடன் தகாத முறையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு பெண்ணுடனும் தற்போது தகாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 12ஆம் திகதி டெனிசன் தெரு மற்றும் கார்ட்மெல் டிரைவ் பகுதிக்கு அருகே பெண்ணொருவரை தவறான நடவடிக்கைக்கு உட்படுத்த முயற்சித்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரால் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.