அக்கரைப்பற்றில் போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

16 0

அக்கரைபற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் காரில் பயணித்த மூவர் போலி நாணயத்தாள்களுடன் அக்கரைப்பற்று பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (18) கைது செய்யப்பட்டனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று வீதித்தடை கடமை வேளையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சந்தேக நபர்கள் 34, 43 மற்றும் 46 வயதுடைய களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்நபர்களிடமிருந்து 5000 ரூபாய் மதிப்புடைய பத்து போலி நாணயத்தாள்கள் மற்றும் கார் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் அக்கரைப்பற்று பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.