மாளிகாவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

14 0

கொழும்பு, மாளிகாவத்தையில் உள்ள வீடொன்றை சோதனையிட்டதில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் நேற்று சனிக்கிழமை (19) மாளிகாவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண் கொழும்பு 10ஐ வசிப்பிடமாக கொண்ட 32 வயதுடையவர் ஆவார்.

இவரிடமிருந்து 06 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் மாளிகாவத்தை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.