லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி

15 0

கடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – கொழும்பு பிரதான வீதியில் எல்தெனிய பகுதியில் லொறியொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் நேற்று சனிக்கிழமை (19) தெரிவித்தனர். 

விபத்தில் உயிரிழந்தவர் கடவத்தை கிரில்லவல பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய நபர் ஆவார்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று முன்னால் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கடவத்தை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.