மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்!

12 0

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய இந்த பெண் 3 பிள்ளைகளின் தாய் ஆவார்.

இப்பெண்ணுக்கு நீரிழிவு நோயால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இன்று பகல் வீட்டின் முற்றத்தில் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வற்கான நீதிமன்ற அனுமதியை பெற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.