‘எதிர்க்கட்சியை மாற்றிடுவோம்’ : வசந்த முதலிகே நீர்கொழும்பில் தேர்தல் பிரசாரம்

23 0

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மக்கள் எழுச்சி கூட்டணியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் வசந்த முதலிகே இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை நீர்கொழும்பு காமச்சோடை வாராந்த சந்தையில்  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதன்போது அவர் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து மக்களுக்கு தமது கொள்கை பற்றி  தெளிவுபடுத்தினார்.

‘எதிர்க்கட்சியை மாற்றிடுவோம்’ என்ற தொனிப்பொருளில் இவரது பிரசாரம் அமைந்திருந்தது.

அத்துடன் வசந்த முதலிகே நீர்கொழும்பு நகரின் பல பிரதேசங்களுக்கும் சென்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.