இந்தி மொழிக்கு நாங்கள் எதிரிகள் கிடையாது- துரை வைகோ

17 0

“புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  “இந்தி மொழிக்கு நாங்கள் எதிரிகள் கிடையாது ” என துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியதாவது:-

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அமைச்சரவையில் தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்கள் என்றால் அதற்கு ஆளுநர் முழு ஆதரவுடன் ஒப்புதல் அளிக்க வேண்டும்.ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக ஆளுநரால் பல்வேறு திட்டங்கள் தடைப்பட்டு உள்ளன. தமிழக அரசு சிறப்பாக செயல்பட பல தடைகளை ஆளுநர் உருவாக்கி இருக்கிறார்.

நீதிமன்றத்திற்கு சென்றுதான் தீர்ப்புகளை பெறவேண்டி இருக்கிறது.கனமழையில் இருந்து சென்னை மீண்டிருக்கிறது என்றால், அரசு நிர்வாகிகள், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் தான் காரணம்.இந்தி மாத தினம் கொண்டாட்டும். இந்தி மொழிக்கு நாங்கள் எதிராளிகள் கிடையாது. ஆனால், அதே வேளையில் இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். இரு மொழிக் கொள்ளைதான் திராவிட இயக்கங்களின் கொள்கை.இருமொழிக் கொள்கை இருப்பதால்தான், உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் ஆளுமைகளாக இருக்கின்றனர்.

அதற்கு காரணம் ஆங்கில புலமை.மும்மொழிக் கொள்கையே இந்தியை திணிப்பதற்காக தான்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.