இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞன் உயிரிழப்பு !

18 0

இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து கடந்த 17 ஆம் திகதி அன்று இடம்பெற்றுள்ளது.

சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த அகில பெர்னாண்டோ என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

பல ஆண்டுகளாக இத்தாலியில் பணிபுரிந்து வந்த இந்த இளைஞன், சமீபத்தில் தனது திருமண நிகழ்விற்காக நாடு திரும்பி மீண்டும் இத்தாலிக்கு சென்றுள்ளார்.

இதன்போது, இந்த இளைஞன், வெளிநாட்டு பிரஜை ஒருவர் செலுத்திய காரில் மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.