தமிழகத்தில் குப்பைத் தொட்டியில் கட்டுக்கட்டாக கிடந்த பெருந்தொகை இலங்கை பணத்தை, அந்த நாட்டு காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மாநகராட்சி துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வரும் ஒருவர் குறித்த பணத்தை கண்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
காவல்துறையினர் பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு குப்பை தொட்டிக்குள் இருந்து மீட்கப்பட்ட பணம், இந்திய ரூபாயின் மதிப்பின் படி, 11 இலட்சத்து 89 ஆயிரம் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.