தொடரும் முள்ளிவாய்க்கால் போராட்டத்திற்கு கிழக்கு மாதர் சங்கத்தினர் ஆதரவு

256 0

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் நேற்று நாற்பத்து ஏழாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமக்கான தீர்வின்றி போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் கிழக்கு மாதர் சங்கத்தினர் நேற்று போராட்ட இடத்துக்கு வருகைதந்து தமது ஆதரவை வழங்கி மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ச்சியாக இந்த மக்களை இவ்வாறு தவிக்க விடாது அனைத்து அமைப்புக்களும் முன்வந்து இந்த மக்களுக்கு ஆதரவு வழங்கி அந்த மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தர முன்வரவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்