HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

10 0

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

7 ஆம் வகுப்ப்பில் கல்வி கற்கும் 12 வயதுடைய  ஐந்து மாணவிகளே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

அங்குருவாதொட்ட , வெனிவல்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்குச் சென்ற  மில்லனிய சுகாதார வைத்திய அதிகாரிகள் சிலர் அப்பாடசாலையில் 7 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 26 மாணவிகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான HPV தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

இதன்போது, HPV தடுப்பூசியை செலுத்தப்பட்ட மாணவிகளில் ஐவர் திடீரென சுகயீனமுற்றுள்ளனர்.

இதனையடுத்து, சுகயீனமுற்ற மாணவிகள் ஐவரும் ஹல்தொட்ட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரனை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இது தொடர்பில் அங்குருவாதொட்ட பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.