நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியினர் விசேட கலந்துரையாடல் !

9 0

தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலானது புதன்கிழமை (16)  மாலை நுவரெலியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் எதிர்வரும் பாராடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் புதிய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியதோடு ஆட்சி, அதிகார நிலவரம் தொடர்பாகவும் எமது எதிர்கால செயற்பாடுகள் பற்றியும் , முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கு நாம் அனைவரும் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பது பற்றியும் கலந்துரையாடல் செய்தனர் ,

எதிர்வரும் பாராடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு  ஏன் வாக்களிக்க வேண்டுமென வருகை தந்த பொது மக்களுக்கும்  தெளிவுபடுத்தினர் அத்துடன் எமது பயணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முன்வருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஏராளமான பொது மக்கள் , வர்த்தகர்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பலரும் இதன்போது பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.