மீதொட்டுமுல்ல – வீடுகள் சேதமடைந்த மக்களுக்கான முழு நட்டஈட்டு

252 0

மீதொட்டுமுல்ல அனர்த்தத்தினால் வீடுகள் சேதமடைந்த மக்களுக்கான முழு நட்டஈட்டுத் தொகையும் வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

மீதொட்டுமுல்ல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பிரதமருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனர்த்த அபாயத்திற்கு முகம்கொடுத்துள்ள மக்களை அங்கிருந்து அகற்றி, அவர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களின் கடன் அறவீடுகள் நீக்குதல், அனர்த்தத்தினால் சேதடைந்த பொருட்களுக்கு நட்டஈடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.