சாலாவ வெடிப்பு – ஒருவருடம் கழிந்தும் நட்டஈடுகள் வழங்கப்படவில்லை

267 0

சாலாவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்று ஒரு வருடம் கழிந்துள்ள நிலையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் நட்டஈடுகள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலாவ அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இந்த நிலையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடுகள் வழங்கப்படாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாதிக்கப்பட்ட மக்கள் எச்சரித்துள்ளனர்.