ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி அப்பாவி மீனவர்கள் விடயத்தில் கடல் சார் சட்டங்களை மதித்து நடக்குமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரவுள்ளது.
இந்திய கடல் எல்லையை தாண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கையின் மீனர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்படவுள்ளது
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்களையும் வழிதவறி இந்திய எல்லைக்குள் செல்பவர்களையும் ஒரேநிலையில் பார்க்கக்கூடாது என்றும் இலங்கை, இந்தியாவிடம் கோரவுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.