வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் நிவாரண உதவி வழங்கி வைப்பு

10 0

கொகமுல்ல, மெகொட, கொலன்னாவ பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 650 குடும்பங்களுக்கு இனம், சாதி அல்லது மதம் ஆகியவற்றை கடந்து, பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம் உல் அசிஸினால்  ஒக்டோபர் 15 ஆம் திகதி அல் நூரானியா பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கையில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தானின் மனிதாபிமான நிவாரண உதவி வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இம் முயற்சி அமைந்திருந்தது.