மழையினால் யாழில் 4 குடும்பங்கள் பாதிப்பு ; இரண்டு உட்கட்டமைப்புகளும் பாதிப்பு!

8 0

மழை அனர்த்தத்தால் யாழில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 11 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு வீடுகளும் பகுதியில் சேதமடைந்திருப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அத்துடன் முக்கியமான உள்கட்டமைப்புகள் 2 சேதமடைந்துள்ளதுடன் அவற்றில்  ஒன்றின் மேல் மரம் சரிந்ததில் இவ்வாறு பகுதியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சங்கனை, நல்லூர் மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலே இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.