டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய 2ம் லெப். மாலதியின் அவர்களின் வணக்க நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்.

29 0

மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப். மாலதி அவர்களின் 37ஆவது ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் Aabenraa நகரத்தில் 13.10.2024 மிகவும் உணர்வுப்பூர்வமாக நடாத்தப்பட்டது.

தமிழீழப் பெண்கள் எழுச்சி நிகழ்வானது பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. 2ம் லெப். மாலதி மற்றும் லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் திருவுருவப் படத்திற்கு ஈகச்சுடர் மற்றும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் மாவீரர்களுக்கு சுடர், மலர் வணக்கம் செலுத்தினார்கள். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

மேடை நிகழ்வாக Aabenraa நகர மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களின் கவிதை, நடனம் மற்றும் மாவீரர்களின் வீரத்தை உணர்த்தும் எழுச்சி கானங்கள் என்பன இடம்பெற்றது.

நிகழ்வின் இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடனும், “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தமிழரின் தாரகமந்திரத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.