உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!

63 0

தமிழ்த்தேசத்தின் இருப்பை அழிப்பதில் கடந்த அறுபது ஆண்டு காலத்திற்கு மேலாக சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்கள் செயற்படுகின்றன.

காலம் காலமாக தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.படுகொலைகளும் பாலியல் வன்கொடுமைகளும் காணாமல் ஆக்கபட்டல்களும் நடைபெற்றன.

தமிழீழ விடுதலைப்புலிகள் தனித்து நின்று தம் இன் உயிர்களை ஈர்ந்துது தமிழர் தேசத்தை காத்து வந்தனர். பௌத்த பேரினவாத அரசாங்கமும் சர்வதேச ஏகாதிபத்திய அரசாங்கங்களும் இணைந்து விடுதலைப்புலிகளை மௌனிக்க செய்தனர்.

இறுதியாக முள்ளிவாய்கால் மண்ணில் மனிதப்பேரவலம் நடைபெற்றது. அதன் பின்னரும் வெவ்வேறு வடிவங்களில் தமிழ் மக்கள் தமது இருப்பை இழந்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் தமக்கான உரிமைகளை பெற்றுத்தருவார்கள் என தமிழ் மக்கள் நம்பினார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு குடையின் கீழ் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து.

விடுதலைக்கான பாதை திறக்கும் என தமிழ் மக்கள் ‘இலகு காத்த கிளி போல’ காத்திருந்தனர்.

கூட்டமைப்புக்குள் உட்பூசல்கள், பதவி ஆசை, பணத்தாசை தலைவிரித்து ஆடியது . தமிழ் மக்களின் பிரச்சனையினை வைத்து வருமானம் தேடினர்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் மறைமுக முகவர்கள் என்பதனை உணர்ந்து கொண்ட தமிழத்தேசியவாதிகள் சிலர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் தேசக்கடமையில் இருந்து ஒய்வெடுக்கவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் இயக்கமாக இறக்கை கட்டினர். தமிழ்மக்களின் உரிமைக்காக ஒங்கி குரல் கொடுக்கின்றனர்.

போருக்கு பின்னரான அரசியற்சூழலில் தமிழ் மக்கள் தமது உரிமைகளை தாமே பெற்றுக்கொள்ள வீதிகளில் இறங்கி போராட்டங்களை முன்னனெடுக்கின்றனர்.

காணிவிடுவிப்பு ,அரசியல்கைதிகளின் விடுதலை , காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வேண்டி போராட்டங்கள் எனத்தொடர்கின்றன.

அதே வேளை தமிழ்பிரதேசங்களை சீரழிக்கும் வகையில் மதுபானசாலைகள் பல்வேறு இடங்களில் திறக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதனை நிறுத்த கோரி மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பதற்கும் தமிழ்மக்களுக்கு தமிழ்  அரசியல் பிரதிநிதிகள் அவசியம்.

அந்த பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பது தமிழ் மக்களின் தலையாய கடமை. சுயநலமும் உழலும் நிறைந்த தமிழ் அரசியல் தலைமைகளுக்கு மத்தியில் சேற்றில் பூத்த செந்தாமரையாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளது.

ஆகவே, தமிழ்மக்களின் உரிமைக்காக இதய சுத்தியுடன் ஏகோபித்த குரலாக ஒலிப்பவர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரே.

2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுகிறது. அவர்களை தெரிவு தெரிவு செய்து.தமிழ் மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல ஐ.நாவிலும் ஒங்கி ஒலிக்க சைக்கிள் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்யுங்கள்.

 

சிங்கத்தின் குகைக்குள் இருந்து உறுமிய மாமனிதர் குமார் பொன்னம்பலம் வழிவந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தெரிவுசெய்து தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யுங்கள்.