வனப்பகுதியில் விறகு வெட்டச் சென்ற தந்தை மாயம்

16 0

கித்துல்உத்துவ வனப்பகுதியில் விறகு வெட்டச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் காணாமல் போயுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

அக்போபுர, கித்துல்உத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே காணாமல் போயுள்ளார்.

காணாமல் போனவர் கடந்த 13 ஆம் திகதி அன்று கித்துல்உத்துவ வனப்பகுதியில் விறகு வெட்டுவதற்காகச் சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என காணாமல் போனவரின் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.