மேல், தென் மாகாணங்களின் பாடசாலைகள் நாளை ஆரம்பம்

15 0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் நேற்று (14) திங்கட்கிழமை மற்றும் இன்று (15) செவ்வாக்கிழமை வரை மூடப்பட்டிருந்த மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை நாளை புதன்கிழமை (16) மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையினால் பல்வேறு பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மூடப்பட்டுள்ள ஏனைய பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர்  தீர்மானிக்க வேண்டும்.