ஆயுர்வேத வைத்தியரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இராணுவ சிப்பாய் கைது

11 0

வெலிஓயா, பராக்கிரமபுர பிரதேசத்தில் வாகனம் ஓட்டுவதற்குப் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த ஆயுர்வேத பெண் வைத்தியர் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் வீதியிலிருந்த பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் செல்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தெடர்பான மேலதிக விசாரணைகளை வெலிஓயா  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.