பிரதமரிடம் 14 வயதுடைய பாடசாலை மாணவி கையளித்துள்ள மனு!

12 0

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேரில் சந்தித்து14 வயதுடைய மாணவி ஒருவர் மனு ஒன்றினை கையளித்துள்ளார்.

பாத்திமா நடா என்னும் மாணவியே திங்கட்கிழமை (14) பிரதமர் அலுவலகத்தில் வைத்து மனுவினை ஒப்படைத்துள்ளார்.

குறித்த மாணவி, காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணித்து பிரதமர் அலுவலகத்தில் சென்றே இந்த மனுவை வழங்கியுள்ளார்.

அந்த மனுவில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதித்துள்ள போதைப்பொருள் பாவனைக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்குமாறும் சிறுவர்கள் மீதான தவறான நடவடிக்கைகளை தடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.