பிரான்சில் திடீரென தீப்பற்றி எரிந்த டெஸ்லா கார்: நான்கு பேர் பலியான பரிதாபம்

16 0

பிரான்சில், மின்சாரத்தால் இயங்கும் டெஸ்லா கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததில் நான்கு பேர் பரிதாபமாக பலியானார்கள்.

சனிக்கிழமை இரவு, பிரான்சிலுள்ள Niort என்னும் நகருக்கு வெளியே டெஸ்லா கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.

இந்த விபத்தில், காரின் சாரதியும், Melle என்னுமிடத்திலுள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் மூன்று பணியாளர்களும் உயிரிழந்தார்கள்.

எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது தெரியாத நிலையில், பொலிசார் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மிக வேகமாக வந்த அந்த கார், பல சிக்னல்கள் மீது மோதியதாகவும், அவசர உதவிக்குழுவினர் வந்து பார்க்கும்போது அந்தக் காரில் இருந்தவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.