குடிசன மதிப்பீடு கணக்கெடுப்பு ஆரம்பித்து வைப்பு !

11 0

2024 ஆம் ஆண்டுக்கான குடிசன தொகை மதிப்பீடானது திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் இன்று திங்கட்கிழமை (14) பிரதேச செயலாளர்  ஜெ.ஸ்ரீபதி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

தம்பலகமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் குறித்த குடிசன தொகை மதிப்பீடு இடம் பெற்றது. 

இக்கணக்கெடுப்பானது இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற 15 ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட வெளிக்கள உத்தியோகத்தர்கள், குடிசன மதிப்பீட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.