தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளை விசேட சந்திப்பு

10 0

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பு நாளை (15) நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் நாளை காலை 9.30 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகு அரசியல் கட்சி செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

அதன்படி, ஒரு வேட்பாளருக்கு செலவிடப்படும் குறைந்தபட்ச தொகையும் நாளை தீர்மானிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தவிர தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது