லெபனானில் ஐநா அமைதிப்படையின் தளத்திற்குள் இஸ்ரேலிய படையினர் – ஐநா

25 0

லெபனானில்  உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் தளத்திற்குள் இஸ்ரேலிய படையினர் பலவந்தமாக நுழைந்துள்ளனர் என  ஐநா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் தளத்தின் பிரதான வாசலை இஸ்ரேலின் இரண்டு டாங்கிகள் தாக்கி சேதப்படுத்தின என ஐநா தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் அமைதிப்படையை சேர்ந்த 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் லெபான் எல்லையிலுள்ள ரம்யா என்ற பகுதியில் உள்ள அமைதிப்படையின் முகாமின் பிரதான வாயிலை இஸ்ரேலிய டாங்கிகள் அழித்த பின்னர் உள்ளே நுழைந்தன லெபானிற்கான ஐநாவின் இடைக்கா படை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இரண்டு மணிநேரத்தின் பின்னர் துப்பாக் பிரயோகம் இடம்பெற்றது,இதன் காரணமாக புகைமண்டலம் உருவானது இதன் காரணமாக 15 அமைதிப்படையினர் உடல்பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.

இவை அதிர்ச்சிதரும் சம்பவங்கள் என ஐநா தெரிவித்துள்ளது.

லெபனானில் உள்ள ஐநா அமைதிப்படையினர் உடனடியாக அங்கிருந்து வெளியேறவேண்டும் என இஸ்ரேலிய பிரதமர் உத்தரவிட்டு சிலமணிநேரங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.